தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை குறைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்..!

Published by
murugan

மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளதால் பள்ளி  கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது  கோர முகத்தை காட்டி வருகிறது.  கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலமாக கல்வியைப் பயின்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பல 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருவதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பள்ளிகள் இயங்கினால் பள்ளியின் பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவு இவைகளுக்காக கட்டணம் அதிக கட்டணம்  வசூலிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் இயங்காத நிலையில் ஆன்லைன் மூலமாக கல்வியில் நடைபெற்று வருவதால் பள்ளியின் பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவுகள் இல்லை இதனால், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளது. இதனால், தனியார் பள்ளி  கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

4 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

5 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

5 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

6 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

7 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

9 hours ago