மாஸ்க் அணியாததால் ரூ.18.4 கோடி அபராதம் செலுத்தி பொதுமக்கள்..!

more than 3 lakh people have been fined Rs 18.4 crore for not wearing masks in public places in Ahmedabad, Gujarat.

அகமதாபாத்தில் பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக ரூ .18.41 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவிவரும் சுழலில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.18.4 கோடி அபராதம் செலுத்தியுள்ளதாக அகமதாபாத் துணை போலீஸ் கமிஷனர்  ஹர்ஷத் படேல் தெரிவித்தார் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, குஜராத்தில் 13,298 தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதே நேரத்தில் 2.10 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், மேலும் 4,171 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.