Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்.!

Published by
மணிகண்டன்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது இரங்கலை அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார். அதில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களில் புதுச்சேரியை செத்தவர்கள் இருந்தால் , அவர்களை மீட்கும் பணிகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் எனவும், அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டு, உதவி எண்களையும் அந்த அறிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

கட்டமில்லா தொலைபேசி எண்கள் – 1070, 1077, 112

தொலைபேசி எண்கள் – 0413-2251003 , 2255996

Published by
மணிகண்டன்

Recent Posts

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

37 minutes ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

51 minutes ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

1 hour ago

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

2 hours ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

3 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

4 hours ago