Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்.!

Published by
மணிகண்டன்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தற்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது இரங்கலை அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார். அதில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களில் புதுச்சேரியை செத்தவர்கள் இருந்தால் , அவர்களை மீட்கும் பணிகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் எனவும், அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டு, உதவி எண்களையும் அந்த அறிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

கட்டமில்லா தொலைபேசி எண்கள் – 1070, 1077, 112

தொலைபேசி எண்கள் – 0413-2251003 , 2255996

Published by
மணிகண்டன்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

31 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

2 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

6 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

7 hours ago