இன்று உத்தரகாண்ட் முதல்வாராக புஷ்கர் சிங் பதவியேற்பு – விழாவில் பங்கேற்கும் பிரதமர்!

Published by
Edison

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

முதல்வராக தேர்வு:

இதனையடுத்து,டேராடூனில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.அதன்படி,டேராடூனில் உள்ள பெரைட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அமைச்சர்கள்:

அப்போது,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்கிறார்.மேலும்,அவருடன் 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மதன் கௌசிக் கூறியுள்ளார்.

பிரதமர் பங்கேற்பு:

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.இதனால்,அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்க உள்ளார்.அதே சமயம்,2 முறையாக உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago