ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்

Published by
kavitha
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றனர் என்று குற்றச்சாட்டு
  • எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் விதியை காட்டுங்கள் என்று ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்

குடியுரிமை திருத்த சட்டத்திருத்தம் முஸ்லிம் சகோதர-சகோதரிகளின் குடியுரிமை பறிக்கப்படப் போகிறது என காங்கிரஸ் கட்சியும் மற்றப் பிற கட்சிகளும் தவறாக வழி நடத்துகின்றனர்.மேலும் சட்டத்திற்கு எதிராக வதந்திகளைப் பரப்புகின்றனர் மேலும் அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார்.

அதில் அவர் கூறுகையில் எந்தவொரு நபருடைய குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடுகின்ற ஏதாவது விதி இருந்தால் அதனை தயவுசெய்து முன்வைக்குமாறு ராகுல் காந்திக்கு  நான் சவால் விடுகிறேன் என்று கூறினார்.மேலும் இந்தியா நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புவது என்வென்றால் இந்த சட்டம் ஆனது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது அப்படி பறிக்கக் கூடிய  எந்த ஒரு விதியும் இதில் இல்லை.
எதற்காக இந்த சட்டம் என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை தான் நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர அது யாருடைய அது குடியுரிமையையும் பறிக்காது. மத துன்புறுத்தல்களிலிருந்து  தப்பித்து ,அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அந்த நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளனர். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக குடியுரிமையை வழங்குகிறோமே தவிர அதை யாரிடமிருந்தும் பறிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தியாகிய நீங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக  நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். இந்திய நாட்டின் அமைதியை அழிக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களிடம் ஏதாவது உண்மைகள் இருக்குமேயானால் அதனை மக்களின் முன் வையுங்கள் என்று கூறினார்.

Recent Posts

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

29 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

44 minutes ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

1 hour ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

14 hours ago