ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் 25 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, இந்த கொரோனா மட்டும் ஊரடங்கால் ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது ரத்து செய்ததற்கான பணத்தை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்ததற்க்கான பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…