ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் 25 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, இந்த கொரோனா மட்டும் ஊரடங்கால் ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது ரத்து செய்ததற்கான பணத்தை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்ததற்க்கான பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…