டெல்லியில் வார இறுதி நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லியில் வரும் வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது வார இறுதி நாட்களில் தீவிர மழையாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான மழை அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்கைமேட் வெதர் என்ற தனியார் வானிலை அறிவிப்பின் துணைத்தலைவர் மகேஷ் பலவட் கூறுகையில், டெல்லியில் வழக்கத்தை விட தாமதமாக தொடங்கினாலும் ஜூலை மாத மழை அதிகமாக உள்ளது. இதனால் ஏற்கனவே டெல்லியில் 200% மழை பெய்துள்ளது.
மாதம் முடிவடையும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்த பகுதி உருவாகியிருப்பதாகவும் இதனால் டெல்லியின் அண்டை மாநிலங்களில் வரும் நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…