ராஜஸ்தான் விபத்து;உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர்மோடி ஒப்புதல்..!

Published by
Edison

ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக நகாவுர்,பாலாஜி காவல் நிலையம் போலீசார் கூறுகையில்,இந்த விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் பலத்த காயமடைந்து பிகானீரின் நோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்து,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நகாவூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்தார்.மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும், என்றார்.

இதனையடுத்து,ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியதாவது:

“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த கொடூரமான சாலை விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிர் இழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:

“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி(பிஎம்என்ஆர்எஃப்)யிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும்,காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய்  வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

1 hour ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

3 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

3 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

4 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago