கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை விசாரணையில் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இதனால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க, பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை குஜராத்திற்கு மாற்ற செய்துள்ளது.
மேலும், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என சதீஷ் பூனியா கூறினார். இந்நிலையில், நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் நாளை முதல் வரும்-14 வரை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் வருகின்ற 14-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…