பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ராமபிரான் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்களும்,ராமர் பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்களும் என இரண்டு முறையில் விரதத்தை கடைப்பிடித்து,ராம நவமியை பக்தர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு தனது ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதவாது,”நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இனிய ராம நவமி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீராமரின் அபரிமிதமான இரக்கம் நாட்டு மக்கள் மீது என்றென்றும் தொடரட்டும். ராமா நீண்ட காலம் நீ வாழ்க!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில்,”ராம நவமி தினமான இன்று அனைவரும் ராமரின் நல்வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.இந்த கொரோனா நெருக்கடி காலத்தில்,வைரஸ் தொற்றினைத் தவிர்க்க கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…