ரெட் அலர்ட் எச்சரிக்கை : மகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி!

Published by
Rebekal

மகாராஷ்டிரா கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, சத்தாரா, புனே, நாக்பூர், சந்திரபூர், பல்கர் போன்ற மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வந்த நிலையில், இந்த மாவட்டங்களில் வெள்ள பெருக்கு அதிகம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளைப்பருக்கு காரணமாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவின் போது 36 வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில், 47 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோரை காணவில்லை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை தொடரும் என்பதால் நேற்று மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினபுரி, சத்தாரா, புனே, சிந்துதுர்க், ராய்கட், கோலாப்பூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 18 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளதுடன், 15 ராணுவ அணிகளும் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முகாம்களில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 136 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago