2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க உரையில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் எளிதில் வழங்கக்கூடிய வகையில் இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமுதாயமாக மாற்றுவதற்கான தனது யோசனைகளை ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி பகிர்ந்து கொண்டார். உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மேலும் இந்த டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னிலை வகிக்க, 5G-யின் ஆரம்ப வெளியீட்டை விரைவுபடுத்துவதற்கும், அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி நெட்வொர்க் உள்நாட்டில் வளர்ந்த நெட்வொர்க் என்றும் வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும் என்று அம்பானி கூறியுள்ளார்.
2 ஜி நெட்வொர்க்கில் உள்ள பின்தங்கிய மக்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை நடவடிக்கைகளை அவசரமாக அரசு செய்ய வேண்டும் என்று அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.”இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய சமுதாயத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேகத்தை அதிகரிக்கும்போது, டிஜிட்டல் வன்பொருளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளரும். சிப் வடிவமைப்பில் இந்தியா உலகத்தரம் வாய்ந்த பலங்களை உருவாக்கியுள்ளது.டிஜிட்டல் வன்பொருளின் பெரிய அளவிலான இறக்குமதியை இந்தியா நம்பக்கூடாது என்று மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார் அம்பானி.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…