அயோத்தியிலிருந்து புதிய மசூதி கட்ட 30 கிமீ தொலைவில் இட ஒதுக்கீடு!

Published by
Rebekal
அயோத்தியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் புதிய மசூதி கட்ட இடம் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் தற்பொழுது பெரிய அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இதனை அடுத்து நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கும் நிலையில், இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகம் சன்னி வக்பு வாரியத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனூஜ் குமார் ஜா ஒப்படைத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

21 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

57 minutes ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago