Categories: இந்தியா

நீட் முறைகேடு.. கேரள சட்டமன்றத்தில் முக்கிய தீர்மானம்.!

Published by
மணிகண்டன்

கேரளா: இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராஜஸ்தான், குஜராத் , பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நீட் முறைகேடு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

தற்போது நீட் முறைகேடு குறித்து கேரளா அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் நீட் (NEET) மற்றும் நெட் (NET) தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

37 minutes ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

2 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

3 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

3 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

4 hours ago