டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக, காட்டு தீ போல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில், தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஏப்ரல் 25-ம் தேதி பதிவிடப்பட்ட, ஆம்புலன்ஸ் ரசீது ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ரசீதில், டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது. இந்த ரசீதை பதிவிட்ட அவர், ‘இந்த உலகம் இன்று நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. பேரழிவுகளை மட்டுமா. உங்களது தார்மீக மதிப்புகளை கூட’ என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…