கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியா 2.2 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6412 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 199 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என்று கேட்டுக்கொண்டது. இதனால் பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்தியா சுகாதாரத் துறைக்கு 2.2 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், தொற்றுநோய்களால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கத்தை ஏழைகளுக்குத் குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…