5 மாநில தேர்தல்.. இதுவரை 331 கோடி ருபாய் பணம், நகைகள் பறிமுதல்- தேர்தல் ஆணையம்!

The Election Commission of India has seized Rs 331 crore worth of cash and jewelry from five states, where the polls are to be held.

தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தங்களின் வேட்புமனு தாக்கல் செய்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும்தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.