ரூ.500 கோடி மோசடி வழக்கு ! ஜாமீனில் வெளியே வந்த பின் கணவனை கொன்ற மனைவி

Published by
Ragi

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சுகன்யா கணவரை கொன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த மெலங்கே சுகன்யா மற்றும் மெலங்கே ஜான் பிரபாகரன் ஆகியோரை கடந்த 2012ல் தமிழக போலீசார் ரூ. 500கோடி மோசடியில் கைது செய்யப்பட்டனர். இதில் சில மாதங்களுக்கு பின் பிரபாகரன் ஜாமீன் பெற, சுகன்யா கடந்த 2018ல் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வந்த பிரபாகரனுடன் ஜூன் 15 அன்று சுகன்யா சேர்ந்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் வசித்து வந்ததை அறிந்து கோபமடைந்த சுகன்யா அவரை கொன்றுள்ளார். பிரபாகரன் உடலை கண்டுபிடித்த போலீசாரிடம், சுகன்யா அவர் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அதனால் தூக்கத்தில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அவரது தயக்கத்தை உணர்ந்து சந்தேகமடைந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து நடந்த விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மல்கஜ்கிரி போலீசார் அவரை கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago