டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியைப் பொறுத்தவரையில், அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கணவர் இறந்தால் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். மனைவி இறந்தால் அது கணவனுக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இருந்தால் பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே பொறுப்பு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியைப் பொறுத்தவரையில் இதுவரையில் 22,111 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…