தற்போது கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், மண்டல பூஜைகள் சபரிமலையில் தொடங்கிவிட்டதால்,சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன, நிலையில், இதுவரை மலையேற்றத்தின் போது 34 பேர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இதேபோல, கடந்த ஆண்டு 173 பேர் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 24பி பேர் இறந்துவிட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு, 281 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 36 பேர் உயிரிழந்தனர்.
இந்த வருடம் சபரிமலை சன்னிதானத்தில் 5 இருதய மருத்துவமனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். இருதய பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுவிடலாம். அங்கே சிகிச்சை முடிந்து, பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படுவார்கள்.
இதய பிரச்சனை உள்ளவர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை கண்டிப்பாக தங்களுடன் வைத்திருக்க வேண்டும், எனவும் அப்படி இருந்தால் முகாம்களில் உள்ள மருத்துவர்கள் விரைவாக சரியான சிகிச்சை அளிக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…