மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் சச்சின் பைலட்.! மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூர் பயணம்.!

Published by
murugan

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் உட்பட  சச்சின் பைலட் டெல்லியில் முகாம் மிட்டார்.

இதன் காரணமாக  ராஜஸ்தான் அரசியல்  மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை கூட உள்ளது. அப்போது, அசோக் கெலாட் தனது  பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று திடீர்ரென சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர், சச்சின் பைலட் சமரசத்துக்கு வந்துள்ளார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேசி வேணுகோபால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சச்சின் பைலட் இன்று சந்திதார். அப்போது, கட்சி தொடர்பான தனது குறைகளை ராகுல்காந்தியிடம் கூறினார். இருவரும் வெளிப்படையான ஆலோசனை நடத்தினர் என கூறினார்.

சச்சின் பைலட் சமரசத்துக்கு வந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை  ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அசோக் கெலாட்  பெரும்பான்மை நிரூபிப்பதில் எந்த பிரச்சனை இருக்காது என கூறப்பட்டுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கபட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது.  தனது ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ள சச்சின் பைலட் “நல்லிணக்கத்தை வழிநடத்திய காந்திகளுக்கு நன்றி, எங்கள் குறைகளை கவனித்து உரையாற்றியதற்காக திருமதி சோனியா ஜி, ராகுல் காந்தி ஜி, பிரியங்கா காந்தி ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

எனது நம்பிக்கையில் நான் உறுதியாக நிற்கிறேன், மேலும் ஒரு சிறந்த இந்தியாவுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையில் ஏற்பட்ட  மோதல் காரணமாக சச்சின் பைலட் தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் உள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.

Published by
murugan

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

11 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

12 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

12 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

13 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

13 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

14 hours ago