ஹரியானாவில் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் அச்சம் காரணமாக, இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,210 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 232 பேர் உயிரிழந்த நிலையில், 9,502 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் அங்கு 4,476 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்ததையடுத்து, பள்ளி, கல்லூரிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஹரியானாவில் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் எனவும், அதன்பின் 31 ஆம் தேதி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…