கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சில மாநிலங்களில் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவிக்கையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தி உள்ளதாகவும், மாணவர்கள் முறையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மல்லேஸ்வரத்தில் உள்ள நிர்மலராணி மேல்நிலைப்பள்ளியை இன்று நேரில் சென்று முதல்வர் பசவராஜ் அவர்கள் பார்வையிட்டு உள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…