மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமாகிய ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்கள், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் பொழுது, தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராஜ்யசபா எம்பி ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவு தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…