உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங், உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு சிவன் கோவில்கள் இருந்ததாகவும், சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே அவர் சர்ச்சையான கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…