ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக, பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ள சந்தையில் விற்பதற்காகவும், இந்த தடுப்பூசிகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…