மத்திய பிரதேசத்தில் தந்தை மொபைல் ஃபோன் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யாததால், மகன் தூக்கிட்டு தற்கொலை.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் இளம் குழந்தைகள் முதல் இளம் வாலிபர்கள் வரை பலர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் தனது தந்தை மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திங்கட்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுவன் மொபைல் போனுக்கு அடிமையாகி இருந்ததும், டேட்டா பேக் காலாவதி ஆன பிறகு தந்தை ரீசார்ஜ் செய்யாமல் இருந்ததும் தான் அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கூலித் தொழிலாளியாக பணிபுரியும் அந்த சிறுவனின் தந்தை தனது குடும்பத்தை நடத்துவதுவதற்கே நிதி பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில் மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…