முக கவசம் அணியாத கடைக்காரரிடம் அபராதம் கேட்டதற்காக காவலர்கள் மீது தனது நாயை அவிழ்த்து விட்ட கடை உரிமையாளர் கைது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவை எதிர்ப்பதற்காக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும், மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பதே முறையான வழி என்பது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாடு முழுவதிலும் அபராதமும் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவிலும் காவல்துறையினர் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாண் எனும் மாவட்டத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர் முக கவசம் அணியாமல் தனது இரண்டு ஊழியர்களுடன் இருந்துள்ளார். எனவே அங்கு வந்த காவலர்கள் முகக்கவசம் அணியாததற்காக அவரிடம் அபராதம் கேட்டுள்ளனர்.
அபராதம் கொடுப்பதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததுடன், தனது வளர்ப்பு நாய்கள் இரண்டையும் காவலர்கள் மீது அவிழ்த்து விட்டுள்ளார். அதில் ஒரு நாய் போலீஸ் அதிகாரியை கடித்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு கடை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…