Gujarat Anand District Accident [Image source : PTI ]
குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில், அகமதாபாத் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் எதிர்ப்பாரா விதமாக டயர் வெடித்த காரணத்தால் பழுதுநீக்கம் செய்வதற்காக சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.
அப்போது பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அதிகாலை 4.30 மணியளவில் அவ்வழியாக வந்த டிராக் (லாரி) பேருந்தின் மோதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். மருத்துவ சிகிச்சையின் போது தற்போது ஒருவர் உயிரிழந்ததாகANI தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் வாகன ஓட்டுனரும் ஒருவர் என கூறப்படுகிறது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…