கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் அருகே பாலா பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி(76). கணவனை இழந்த இவருக்கு அலெக்ஸ் பேபி (46) உட்பட இரண்டு மகன்கள் உள்ளன. ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாக வில்லை .
தந்தை பெயரில் மாவேலிகரையில் இருந்த 10 சென்ட் நிலத்தை அலெக்ஸ் பேபி 60 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் தாய் அம்மு குட்டியுடன் பாலாவில் உள்ள ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 04-ம் தேதி அம்முகுட்டி லாட்ஜில் இறந்துள்ளார்.
இதையடுத்து அவரின் உடலை அலெக்ஸ் பேபி காரில் ஏற்றிக் கொண்டு பல இடங்களில் சுற்றியுள்ளார். பின்னர் பலாவில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே உள்ள ஒரு ஓடையில் அம்மு குட்டியின் உடலை வீசியுள்ளார். மறுநாள் காலையில் உடலை பார்த்ததும் பாலா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் இப்பகுதியில் இருந்த கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் காரில் வந்து சடலத்தை வீசியது தெரியவந்தது. கார் பதிவு எண் தெளிவாக தெரிந்தது இதையடுத்து அலெக்ஸ் பேபியை போலீசார் கைது செய்தனர்.
அலெக்ஸ் பேபியிடம் விசாரித்தபோது அடக்கம் செய்ய பணம் இல்லாததால் உடலை ஓடையில் வீசியதாக கூறினார்.
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…