கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட மகன்.! தாய் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவா போலீஸ்.!

Published by
Ragi

கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாலை 2.17 மணியளவில் அபினா யேஷ்வந்த் சங்கல்கர் என்ற தாயார் தனது மகனான அவினாஷ் யேஷ்வந்த் சங்கல்கரை தெரியாத நபர் ஒருவர் கற்களால் தனது மகனின் தலையிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கி கொலை செய்ததாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து கொலை செய்த நபரை கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவா காவல்துறை கண்காணிப்பாளர்(SP) ஷோபித் சக்சேனா கூறியதாவது,தாய் புகார் செய்த அடுத்த நொடியிலிருந்து கோவாவில் உள்ள பாபாவின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) கஜனன் பிரபுதேசாய் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் துஷார் ஆகியோர் பிஐ சந்தேஷ் சோடங்கரின் உதவியுடன் 5 குழுக்களை அமைத்து கொலை குறித்த விசாரணையை தொடங்கியதாக தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கில் பல நபர்கள் விசாரிக்கப்பட்டதாகவும், மின்னணு மற்றும் தடவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டதாகவும் கோவா எஸ்பி கூறினார். அதனையடுத்து கோவாவை சேர்ந்த முகேஷ் சியோ விநாயக் தேவ்சேகர் என்ற 48 வயதான நபர் தான் குற்றவாளி என்பதை போலீசார் புகார் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர் . அதனையடுத்து அவரிடம் நடந்த தொடர் விசாரணையில் தான் அவினாஷை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இறந்தவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது சண்டையாகி கொலைக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கொலை குறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.

Published by
Ragi

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago