மகாராஷ்டிராவில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் ஆளுநர் முன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எங்களுக்கு பெருபான்மை உள்ளது என கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆளுநரின் முடிவை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை என குற்றம்சாட்டி உள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…