Categories: இந்தியா

எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்! போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Published by
பால முருகன்

எடியூரப்பா : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தது.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது கடந்த மார்ச் 14-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, எடியூரப்பா இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடிநேற்று சம்மன் அனுப்பியும் இருந்தது.

பின், தனக்கு ஆஜராக ஒருவாரம் கால அவகாசம் வேண்டும் என்று தனது வழக்கறிஞர்கள் மூலம் சிஐடிக்கு கால அவகாசம் கேட்டு இருந்தார். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் எடியூரப்பாவை போக்ஸோ வழக்கில் கைது செய்யவேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  மனு செய்து இருக்கிறார்.

அந்த மனுவை ரத்து செய்யவேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு எதிராக வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுவும் செய்து இருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், ஜூன் 17-தேதி தான் விசாரணைக்கு ஆஜர் ஆக முடியும் என எடியூரப்பா  பதில் கூறியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள எடியூரப்பா, பெங்களூரு திரும்பினால் கைதாக வாய்ப்பு இருக்கிறது. தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்றும் கர்நாடக நீதிமன்றத்தில் அவர் மனு கொடுத்துள்ள நிலையில்,  எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தது.

மேலும், எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், குற்றப்பத்திரிகை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு  முன்னதாக சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்படும். அத்துடன், எடியூரப்பாவின் வாக்குமூலம் பெறப்படும். தேவை ஏற்பட்டால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் எனவும் கர்நாடக அமைச்சர்ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

5 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

6 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

6 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

6 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

7 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

14 hours ago