ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள ஹரிபரிகாமில் உள்ள சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமதின் வீட்டிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் அவரது மகள் ராபியா ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராபியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…