பெண்களிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கேரளா முதல்வர்!

Published by
Rebekal

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரளா முதல்வர் பினராயி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக பெண்கள் சிலர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் அம்மாநில ஆளுநர் சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரளா ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்று சமூக விழிப்புணர்வு மேற்கொண்டால் தான் வரதட்சணை கொடுமையை தடுக்க முடியும் எனவும், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் கேரளாவில் 100 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், 2016 முதல் 2021 வரை இந்த உயிரிழப்புகள் 54 ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக 2020 – 2021 காலகட்டத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனிமேல் கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Published by
Rebekal

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

2 minutes ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

1 hour ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

2 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

4 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

4 hours ago