கடந்த தினங்களாகவே வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அசாமின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அசாமில் பா.ஜ.க எம்.எல்.ஏவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெறக் காரணமாகும்.
இந்நிலையில், குடியுரிமை மசோதா தொடர்பான போராட்டங்களின் எதிரொலியாகவே வங்காளதேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் 12 முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும், இன்று மாலை 5.20 மணிக்கு இந்தியா வருவதாகவும் திட்டமிட்டுருந்தது.
ஆனால், அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களால் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன், அவரது இந்திய வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…