Categories: இந்தியா

பாஜக வேட்பளர் திடீர் விலகல்.. புதிய வேட்பாளரை நியமித்த கட்சி தலைமை!

Published by
பாலா கலியமூர்த்தி

Satyadev Pachauri: மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி திடீரென விலகினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளிலும் ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, பங்கீட்டை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில், பாஜக இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக எம்பிக்கள் ஒருபக்கம் விலகி வரும் நிலையில் மறுபக்கம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் சிலர் விலகி வருகின்றனர்.

அந்தவகையில், மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி அறிவித்தார். வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பல நாட்கள் கழித்து, போட்டியிட போவதில்லை என திடீரென அறிவித்தது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்செளரி, போட்டியிட மறுத்து பாஜக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். வயது மூப்பு காரணமாக விலகியதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய வேட்பாளரை நியமிக்க பாஜக திட்டமிட்டது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கான்பூர் பா.ஜ., எம்.பி., சத்யதேவ் பச்சௌரி அறிவித்ததை தொடர்ந்து அந்த தொகுதியில், முன்னாள் மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவஸ்தியை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

36 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago