மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்து வருகிறது மகாராஷ்டிரா அரசு.இந்த நிலையில் தான் மும்பையில் உள்ள ஆரே காலனியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது.இதற்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்தது.
இதனால் ஆரே காலனியில் உள்ள 2700 மரங்களையும் வெட்ட முடிவு செய்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,பின்னர் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பலர் மரங்கள் வெட்டப்படுவதை புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.
இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கினை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.இன்று இதன் மீதான விசாரணை நடைபெற்றது.இதில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்தது.மேலும் இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் யாரையேனும் கைது செய்து விடுவிக்காமல் இருந்தால்,உடனடியாக விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…