ஆரே பகுதியில் மரங்களை வெட்ட தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவு

Published by
Venu

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்து வருகிறது மகாராஷ்டிரா அரசு.இந்த நிலையில் தான் மும்பையில் உள்ள ஆரே காலனியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது.இதற்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்தது.
இதனால்  ஆரே காலனியில் உள்ள 2700 மரங்களையும் வெட்ட  முடிவு செய்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,பின்னர் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  பலர் மரங்கள் வெட்டப்படுவதை புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.
இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கினை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.இன்று இதன் மீதான விசாரணை நடைபெற்றது.இதில்  மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம்  தடை விதித்தது.மேலும் இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் யாரையேனும் கைது செய்து விடுவிக்காமல் இருந்தால்,உடனடியாக விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு  விசாரணையை அக்டோபர்  21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago