அயோத்தி வழக்கிற்காக கூடுதல் ஒரு மணிநேரம் இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

Published by
மணிகண்டன்

கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறி ஏற்கனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் பலர் இறந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்களை இந்த சம்பவம் உண்டாக்கியது. பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பும் வெளியானது. ஆனால் அந்த தீர்ப்பில் இரு தரப்பினரும் திருப்தி அடையாததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அந்த வழக்கு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளும் முடிவடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக வரும் திங்கள் முதல் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுப்ரீம் கோர்ட் 4 மணிக்கு தனது அலுவல்களை முடித்துக் கொள்ளும். ஆனால், தற்போது அயோத்தி வழக்கு விசாரணைக்காக 5 மணி வரை தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

16 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago