அயோத்தி வழக்கிற்காக கூடுதல் ஒரு மணிநேரம் இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

Published by
மணிகண்டன்

கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறி ஏற்கனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் பலர் இறந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்களை இந்த சம்பவம் உண்டாக்கியது. பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பும் வெளியானது. ஆனால் அந்த தீர்ப்பில் இரு தரப்பினரும் திருப்தி அடையாததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அந்த வழக்கு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளும் முடிவடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக வரும் திங்கள் முதல் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுப்ரீம் கோர்ட் 4 மணிக்கு தனது அலுவல்களை முடித்துக் கொள்ளும். ஆனால், தற்போது அயோத்தி வழக்கு விசாரணைக்காக 5 மணி வரை தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago