கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறி ஏற்கனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் பலர் இறந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்களை இந்த சம்பவம் உண்டாக்கியது. பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பும் வெளியானது. ஆனால் அந்த தீர்ப்பில் இரு தரப்பினரும் திருப்தி அடையாததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளும் முடிவடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக வரும் திங்கள் முதல் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுப்ரீம் கோர்ட் 4 மணிக்கு தனது அலுவல்களை முடித்துக் கொள்ளும். ஆனால், தற்போது அயோத்தி வழக்கு விசாரணைக்காக 5 மணி வரை தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…