முன்னாள் கமிஷனர் மீதான வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Published by
murugan

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிரா போலீசார் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் பெரும் உத்தரவை பிறப்பித்துள்ளளது. அது என்னவென்றால்  மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிர போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மை வெளிவருவது முக்கியம், ஆனால் பரம்பீர் சிங்கும், முன்னாள் உள்துறை அமைச்சரும் ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டன என்று நீதிமன்றம் கூறியது.

மும்பையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பரம்பீர் சிங் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பரம்பீர் சிங் மீது இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகள் இனி சிபிஐ-க்கு செல்லும். கடந்த பல மாதங்களாக, மகாராஷ்டிர அரசும், முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

58 seconds ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago