மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக 16% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீட்டை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 1992 ஆம் ஆண்டில் 50% மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 60 % மேல் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் வருமா என்றால் வராது. காரணம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…