பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது.
கொரோனா காரணத்தால் யுஜிசி மற்றும் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வாதம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தேர்வு நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தாங்கள்தான் என்று யுஜிசி வாதம் வைத்து இருந்தது. மேலும், இந்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா யுஜிசி சார்பில் வாதாடினார்.
அப்போது, டிகிரி கொடுப்பது யுஜிசிதான். அதற்குத்தான் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி இந்த தேர்வுகளை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வது எந்த வகையில் நியாயம் ஆகும். அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேள்விகள் எழுப்பி இருந்தார். தேர்வை ரத்து செய்ததற்கான உரிய காரணங்களை முன் வைக்குமாறு, உச்ச நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகளிடம் விளக்கம் கேட்டு இருந்தன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 18- ஆம் தேதி யுஜிசி தேர்வு நடத்துவது குறித்து அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குவாதங்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், அனைத்து கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…