பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது.
கொரோனா காரணத்தால் யுஜிசி மற்றும் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வாதம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தேர்வு நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தாங்கள்தான் என்று யுஜிசி வாதம் வைத்து இருந்தது. மேலும், இந்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா யுஜிசி சார்பில் வாதாடினார்.
அப்போது, டிகிரி கொடுப்பது யுஜிசிதான். அதற்குத்தான் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி இந்த தேர்வுகளை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வது எந்த வகையில் நியாயம் ஆகும். அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேள்விகள் எழுப்பி இருந்தார். தேர்வை ரத்து செய்ததற்கான உரிய காரணங்களை முன் வைக்குமாறு, உச்ச நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகளிடம் விளக்கம் கேட்டு இருந்தன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 18- ஆம் தேதி யுஜிசி தேர்வு நடத்துவது குறித்து அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குவாதங்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், அனைத்து கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…