ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பதவியேற்றார். இந்நிலையில் அவர் பதவியேற்ற நாள் அன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அழைத்து, வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டுள்ளார் என்றும், நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…