ஆந்திர பிரதேசம்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 2014, 2019 தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கிறது.
ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் 12 இடங்களை கைப்பற்றிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாகும்.
இந்நிலையில் நாளை தங்கள் ஆதரவு NDA எம்பிகளுடன் நாளை பாஜக டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. அதில் மத்திய அமைச்சரவை பற்றிய முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த எம்பிக்கள் கூட்டத்தில் நாளை நடைபெறும் NDA எம்பிக்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…