# அறிவிப்பு#ரவுடி தலைக்கு 2.50 லட்சம் பரிசு

Published by
kavitha

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் ,8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய  கான்பூர் என்கவுன்டர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலுடன் தொடர்புடைய, மேலும் 3  போலீசார் அதிரடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

இந்த துப்பாக்கி சூட்டில்  ஒரு  டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர்.இந்நிகழ்வு அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர். இதில் தற்போது துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image

என்கவுன்டர் நடந்த இடத்துக்கு அருகாமையுள்ள உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கும், ரவுடி கும்பலுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ரவுடி துபேயை பிடிப்பதற்காக போலீசார் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவித்தனர்.ஆனால் அவ்வாறு ரவுடி குறித்து வரும் தகவலை, சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிலர், முன் கூட்டியே ரவுடி கும்பலுக்கு கசியவிட்டது அம்பலமாகியது.

இதன் அடிப்படையில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, சமீபத்தில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் ஒரு எஸ்.ஐ., உள்ளிட்ட, மேலும் 3  போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர்களிடம்  தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பரிசு தொகை, 2.50 லட்சம் ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
kavitha

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

18 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago