Categories: இந்தியா

அதானி குழும விவகாரம் தொடர்பான வழக்கு..! மே-15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

Published by
செந்தில்குமார்

அதானி குழும விவகாரம் தொடர்பான வழக்கை மே-15ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் பங்குசந்தையில் முறைகேடாக ஈடுபட்டதாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டதன் அடிப்படையில் அதானி குழுமம் பங்குசந்தையில் பெரும் சரிவை கண்டது.

இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு அவைகளிலும் அமளி நிலவியதால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ்.நரசிம்ஹா, ஜே.பி. பரதிவாலா அமர்வு அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை அமைத்தனர். அந்த நிபுணர் குழுவானது தங்கள் விசாரணையை நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை மே-10 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக் கொண்டு மே-12 அதாவது இன்று அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது. இதில் விசாரணையை நடத்த 6 மாதம் அவகாசம் கேட்ட செபி (SEBI) அமைப்பின் கோரிக்கையை அடுத்து, அதானி விவகாரம் தொடர்பான வழக்கை மே-15ம் தேதி திங்கள் கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago