Categories: இந்தியா

சட்டை பையில் இருந்த செல்போன்…திடீரென ‘தீ’பற்றியதால் பரபரப்பு…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!

Published by
பால முருகன்

கேரளாவில் 76 வயது நபர் சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக கேரளாவில் செல்போன்கள் வெடித்து தீப்பிடித்து வருகிறது. கடந்த வாரம், கோழிக்கோடு நகரில், கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் வெடித்ததில், ஒருவர் தீக்காயமடைந்த சம்பவம் நடந்தது. அதைப்போல, இதற்கு முன், கடந்த  ஏப்ரல் 24ம் தேதி, திருச்சூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, தான் பயன்படுத்திய மொபைல் போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் 76 வயது முதியவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் ஒன்று வெடித்துத் தீப்பிடித்ததால் அவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

அந்த 76 வயது முதியவர்  இங்குள்ள மரோட்டிச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி, வருகிறது. வீடியோவில்  “முதியவர் கடையில் உள்ள மேஜையில் சாதாரணமாக அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த தொலைபேசி ஒலியுடன் வெடித்து தீப்பிடித்தது.

முதியவர் உடனடியாக குதித்து, தேநீர் கிளாஸைத் தட்டி, தனது பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்க முயற்சிக்கிறார். தொலைபேசி அவரது சட்டைப் பையில் இருந்து தரையில் விழுந்தது, அவரது சட்டையில் சிறிய தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் முதியவருக்கு உதவி செய்து போனில் தீ எரிந்துகொண்டிருந்ததை பார்த்து தண்ணீர் ஊற்றி அனைத்தார். தொடர்ந்து 3-வது முறையாக கேரளாவில் போன் தீ பிடித்து தானாகவே எரிந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago