“சர்ச்சை வேண்டாம்;சட்டத்திற்கு கட்டுப்படுங்கள்”-ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதில்..!

Published by
Edison

இந்திய அரசின் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் டூல்கிட் தொடர்பாக ட்விட்டர் அலுவலத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில்,இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையில்,மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து,இந்த புதிய விதிகளினால் இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

இந்த விதிமுறைகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”இந்திய மக்களுக்கு சேவை வழங்குவதில் ட்விட்டர் எப்போதுமே பொறுப்புடன் செயல்படும்.தொடர்ந்து இந்தியாவில் சேவை வழங்க சட்ட விதிமுறைகளின்படி செயல்பட ட்விட்டர் தயாராகவே உள்ளது. ஆனால்,கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ள முறைகளை கையாள்வது கவலை அளிக்கிறது.

மேலும்,சட்ட விதிமுறைகளை மதிப்பதுடன் அதேசமயம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம்,வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கொள்கைகளின்படி இயங்குவதுமே சரியானதாகும்.எனவே புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”,என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஒரு சமூக ஊடகமான நிறுவனமான ட்விட்டர்,ஆணையிட முயல்கிறது.மேலும்,நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவின் சட்ட திட்டங்களை வேண்டுமென்றே தரம் தாழ்த்தும் நோக்கில் முயலுவதாக தெரிகிறது.குறிப்பாக குற்றச்செயலை தடுக்கும் நோக்கில் செயல்படும் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் புதிய நெறிமுறைகளுக்கு கட்டுப்படவும் மறுக்கிறது”,எனத் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய அரசு கூறியதாவது,”தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை விட்டுவிட்டு,நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள்”,என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளது.

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

6 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

7 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago