சிறுத்தையிடம் சிக்கிய குழந்தை…! பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி…!

Published by
லீனா

சிறுத்தையிடம் சிக்கிய பேத்தியை மீட்க சிறுத்தையுடன் சண்டையிட்ட தாத்தா-பாட்டி.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் குனோ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள துரா கிராமத்தில் தாத்தா, பாட்டி மற்றும் அவர்களது பேத்தி ஆகியோர் தங்களது வீட்டில் தரையில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சிறுத்தை தரையில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு சென்றுள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி, சிறுத்தையின் தாடையில் குழந்தையின் வலது காலைக் கண்டு அலறி கத்தினார். குழந்தையை இழுத்து செல்ல முயன்ற சிறுத்தையை, பாட்டி உதைத்துள்ளார். பின் பாட்டி மற்றும் பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த, பேத்தியின் தாத்தாவான, ஜெய் சிங் குர்ஜார் சிறுத்தையின் மூக்கு மற்றும் கண்களில் உதைத்தார். பின் சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டது.

பின் அந்த சிறுத்தை குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி இருவரையும் கடிக்க முயன்றுள்ளது. அதற்குள் சுற்றியுள்ள அக்கம்பக்கத்தினர் குச்சிகளுடன் வர, அது காட்டுக்குள் ஓடியுள்ளது. கர்ஹால் தொகுதியில் உள்ள துரா, குனோ தேசிய பூங்காவிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, குனோ கோட்ட வன அலுவலர் பி.கே.வர்மா கூறுகையில், சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 hour ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago