‘நாட்டிற்கு அவர் தேவை’:50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதி வைத்த 78 வயது மூதாட்டி!

Published by
Edison

உத்தரகாண்ட்:டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற மூதாட்டி,காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக கூறி,ராகுல் காந்தியின் பெயருக்கு வீடு, தங்க ஆபரணங்கள் உட்பட தனது முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 டோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் வைத்துள்ளார்.புஷ்பா முன்ஜியால்,டேராடூன் நீதிமன்றத்தில்,தனது சொத்துக்களின் உரிமையை நேற்று ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார்.

சொத்து எழுதி வைக்க இதுதான் காரணம்:

இதற்கான காரணம் குறித்து புஷ்பா முன்ஜியால் கூறுகையில்,”இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.அந்த வகையில்,தற்போது சோனியா காந்தியும்,ராகுல் காந்தியும் தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

மேலும்,ராகுல் காந்தி மற்றும் அவரது யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனவேதான்,ராகுல் காந்தியின் எண்ணங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கு வழங்குகிறேன்”,என்று புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார்.

இதனையடுத்து,உத்தரகாண்ட் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங்கின் வீட்டில் வைத்து புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களுக்கான ஆவணங்களை வழங்கினார்.

காங்கிரஸ் தோல்வி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால்,பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றது.

டெல்லியில் பிரதமர் இல்லை:

இதனிடையே,உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி பல பேரணிகளை நடத்தினார்.அவ்வாறு நடைபெற்ற ஒரு பேரணியின் போது ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டு தாக்கினார்.அதாவது “டெல்லியில் பிரதமர் இல்லை.டெல்லியில் ஒரு ராஜா அமர்ந்திருக்கிறார்.அப்படியொரு அரசு எங்களுக்கு வேண்டாம். ஏழைகள், விவசாயிகள்,சிறுதொழில் செய்பவர்கள்,எம்எஸ்எம்இ-யில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இளைஞர்கள்,மக்களுக்கு வேலை வழங்கும் அரசுதான் எங்களுக்கு வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,ராகுல்காந்தியின் யோசனைகள் நாட்டுக்கு அவசியம் எனக்கூறி உத்தரகாண்ட் மூதாட்டி தனது சொத்துக்களை ராகுல்காந்தி பெயருக்கு மாற்றியுள்ளார்.

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

2 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

2 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

4 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

4 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

4 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

5 hours ago